எத்தனை அழகு
சாதனப் பொருட்கள்..
எத்தனை அலங்காரங்கள்
அம்சமாக அமைந்தாலும்
அவன்...
அருகில் பார்த்து ரசிக்க
நான் ..வெட்கபடுவதே
எனக்கு மிகப்பெரிய
அழகு.
கண்ணாடி காட்டாத
அழகைக்கூட...அவன்
முன்னாடி என்னை
காட்டுகிற அழகுக்கு
என்ன ஈடு இணை
இருக்கப்போகுது.
இந்த
இல்லாள் என்பது
அவனின் இதயமல்லவா..
இல்லாத இன்பம்
அவனின்றி இல்லாமல் இல்லை.!
