கோபத்திலே குணமிருக்கும்
ஆத்திரத்தில் அன்பிருக்கும்
எரிச்சலில் ஏக்கமிருக்கும்
கடுகடுப்பில் பாசமிருக்கும்.
கண்டிப்பில் கவணிப்பிருக்கும்
தண்டிப்பில் பிரியமிருக்கும்
அதட்டலில் போலியிருக்கும்
மிரட்டலில் செல்லமிருக்கும்
அழைப்பதில் பதற்றமிருக்கும்
அப்பா என்றால் பயமிருக்கும்
அப்பாக்களுக்கு பிள்ளைகளே
அனைத்துலக இருக்கும்.
வெளிப்படையாய் பார்த்தால்
பலாப்பழம் போன்றவர்.
உள்ளமோ பலாப்பழ சுளைப்போன்று
தித்திப்பாய் இனிப்பவர்.
அப்பா...
சொல்லும்போதே
ஒரு கெத்து வரும்.
அது மட்டுமே சொந்த வரும்!
-மு.யாகூப் அலி்