தினமும் தான்..
அந்த ஒரு சில நிமிடங்களில்
நிறைந்திருக்கும் ஆவல்கள்
நிறைவேறாத தருணங்களில்.
அப்படியொரு ஆர்ப்பரிப்பு
அது இது எது என்ற விசாரிப்பு,
மகிழ்வின் உச்சத்தில் நடுக்கம்
கேட்டுவிட்டோம் சொல்லிவிட்டோம் பூரிப்பும்.
ஆசைகள் பரிமாறின சத்தமின்றி
பேராசைகள் முத்தமாகின கூச்சமின்றி
செவிகளின் வாயிலாக ..நிறைந்தன
அன்பும் ..பண்பும்...பாசமும்...காதலும்.
பணம் செலவானது மனம் வரவானது
நேரம் நெருங்க...தூரமானோம்
வேறேதும் செய்தியை வினவிட..
விழிகள் நான்கும் பேசிக்கொண்டது.
விடைபெற்று வெளியே வந்தேன்.
தொலைதூரம் என்பது மாயை..
தொலைபேசி தந்துபோனது சுமையே
திருப்தி படுத்தியது பேசிவிட்டேன்.

அசத்தல்
பதிலளிநீக்கு