இரவு 11-40க்கு எல்லா பார்சல்களையும்
எடுத்து ஹெட் ஆபீஸ்க்கு கிளம்ப ஆயத்தமானார்கள் ..அந்த சமயத்தில்..
குவைத் போலீஸ் உடையில் காரில் வந்து இறங்கிய இரண்டு பேர்..
ஒருவர். ..சோமுவின் பக்கமாகவும்
இன்னொருவர் ஷாமுவின் பக்கமாகவும்
நின்று நாங்க போலீஸ் உங்கள் விசா ஐடி கார் லைசன்ஸ் இவைகளை எடு...
என்றும் இந்த நேரத்துல என்ன பன்றீங்க...யாரு நீங்க
வண்டியில் என்னா இருக்குது ..என்று சோமு பக்கமாக உள்ளவன் கேட்டான்..சோமு சொன்னான் நாங்க கார்கோ கம்பெனியில் வேலை பார்க்கிறோம்..
இதில் இருக்கும் பொருள்கள் யாவும் குவைத்தில்
உழைக்கும் இந்தியர்கள் தன் குடும்பத்திற்கு பார்சல் அனுப்புவார்கள்..அதை நாங்க எடுத்து போக வந்தோம் என்றான்.
சரி சரி 12 மணி ஆகுதே ..இன்னுமா வேலை முடியவில்லை என்றான் ஒருவன்..
ஆமா சார்..ஒரு கஸ்டமர் நாளை ஊர் போக
வாங்கிய பொருள்கள் அதிகமானதால்..
மீதமுள்ள பொருள்களை கார்கோவில் போட அழைத்தார்கள் வேறு வழியில்லை..
என்றான் ஷாம்..(இங்கு அரபி மொழி யில் உரையாடல்..புரிதலுக்காகவே தமிழில் )
சரி சரி பணம் பொருள் பத்திரம்..நாங்க போலீஸ் என்று எப்படி நம்புனீர்கள் நாங்க
போலீஸ் உடையில்...இருப்பதால் மட்டுமா என்றான் மற்றொருவன்..சோமு விடம் கேட்டான்..நம்புவதில் சரியோ தவறோ..
எங்களுக்கு என்ன எழுதி இருக்கும்
அதுதானே நடக்கும்..நீங்கள் யாரு உண்மையான போலீஸா இல்லை வழிப்பறி போலீஸா என்று தெரிவதற்கு எங்களிடம்
வார்த்தையில்லை...ஆனால் நாங்க
ஆபீஸ் திரும்பும் வரை இதிலிருக்கும் பொருள்களுக்கு ..வாகனத்திற்கு பணத்திற்கு நாங்களிருவருமே பொருப்பேற்கனும்..என்றான் ஷாம்.
சரி சரி கவலை வேண்டாம் நீங்க வேறெங்கும் நிற்காமல் நேரா உங்க ஆபீஸ்கு போகவும்.
இப்போதெல்லாம் எங்களைப்போல் பல போலி போலீஸ்கள் உருவாகி வழிப்பறி செய்வதால் நாங்களும் அவர்களைப்போல்
நடமாடுகிறோம்..இதே போல் உங்களிடம் வேறு யாரும்...போலீஸ் என்று வந்தால்..
வாகனத்தை விட்டு இறங்க வேண்டாம்..
நிஜமான போலீஸ் அவசரப்படாமல்..
உங்களை விசாரித்தாலே புரிந்து உங்க
ஐடிகளை காட்டுங்கள்..எந்த நிலையிலும்
வேறு வேறு ஐடி வேறு கேள்வி கேட்டால்
அவர்களிடம் கவனமாக இருக்கவும்..உடனே
கார் ஹாரன் அடித்து கொண்டே இருக்கவும்..அக்கம் பக்கம் உள்ளவர்கள்..
வருவதை தெரிந்து கொல்லையர்கள் ஓடி விடுவார்ரகள்..அவர்களிடம் ஆயுதம் இல்லாத காரணத்தால்.
ஒரு சில கொல்லையர்கள்..ஆயுதங்கள் கத்தி ...துப்பாக்கி போன்றவைகளும் இருக்கும்..அதில். ஏமார்ந்தவர்களும் உண்டு..இருந்தாலும்..பார்த்து கவனமாக பயணியுங்கள்..என்று விடைபெற்றனர்..
குவைத் போலீஸ்.
ஒரு வழியாக ஏதோ இருவரின் நல்ல நேரம் வந்த போலீஸ் இருவரும் நல்லவர்களாகவே
வந்து செக் செய்து போனார்கள்.என்று இருவரும் அன்றைய பொழுதை நிறைவு செய்ய கணக்கு முடித்து தங்களது இருப்பிடத்தை நோக்கி நடந்தார்கள்..
போகும் போதே உணவு சமைப்பதற்கான
எல்லாம் வாங்கி சென்றார்கள்..என்னடா
இரவு 12. மணிக்கு சமையலா...ஆமாங்க
அந்த ஒரு வேலை தான் நாங்க சமைத்த உணவு.மற்ற இரு வேலை உணவு வெளியில் சாப்பிடுவோம்..எனவே அங்கே ரூம் போனார்கள் சமைத்தார்கள்..
சாப்பிட்டார்கள்..
தலைகோத தவமிருக்கும் தலையணையும்..
அள்ளி அணைக்க போர்வையும் ...கண்களுக்கு விருந்தளிக்க
கனவுகளும் போல்..அந்த கனவோடு கொஞ்சி மகிழ ஓடி உழைத்த தேகம்..ஒய்யார குஷியில் படுக்கறையை
புரட்டி போட்டே புரண்டான் இந்த ஷாம்.
எப்பவும் போல அதிகாலை ஆதவன் வருகை ..விடியலை எழுப்பினான்..ஷாம்
குளித்து முடித்து சோமு வை அழைத்துக்கொண்டு ஹெட் ஆபீஸை நெருங்கையில்..மற்ற டிரைவர் அட்டன்டர் முகமும் ரொம்ப கவலையுடனே காணப்பட்டது..அந்த கவலைக்கு பின்னால் மிகப்பெரிய சம்பவம் நடந்திருக்கு என்றே யூகிக்க முடிகிறது..அப்படி என்ன நடந்திருக்கும் என்று கிட்ட நெருங்கி விசாரிக்கையில்..எல்லாமே வா எல்லாமே வா..எரிந்து சாம்பலாகிவிட்டதா...என்று...
அணல் பறக்க வார்த்தைகள்..
எல்லாம் எரிந்தது ..என்றால் ..என்னவா இருக்கும்...நாளை பார்ப்போம்..
தொடரும்.....